பல்லவியும் சரணமும் II - பதிவு 8
சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!
ஓருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))
ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!
3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!
1. அட நான் சொல்வது உண்மை அதை நம்பினால் நன்மை
2. தாய் என்னும் பூமாலை தரை மேலே வாடுதே
3. செவந்த முகம் கண்டு என் மனசு பதறுது
4. நீ புதிதாய் பிறப்பது எப்பொழுது
5. தப்புக் கணக்கை நாளும் படிச்சேன்
6. வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை
7. காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
8. சுகமான உன் மேனி பாடல்
9. கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்
10. நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை
11. சிலையாக நாம் நிற்பதே அற்புதம் ...
12. பலப்பல ஜென்மம் நான் எடுப்பேன், பாடல்கள் கோடி ...
என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!
என்றென்றும் அன்புடன்
பாலா
14 மறுமொழிகள்:
1. வானத்தைப் பார்த்தேன் பூமியைப்பார்த்தேன் மனுஷனை இன்னும் பார்க்கலையே (ரஜினி படம்)
5. உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன் தங்கமே தங்கமே (அபூர்வ சகோதரர்கள் - கமல்)
6. சுந்தரி கண்ணால் ஒரு சேதி (தளபதி)
9. பச்சைக் கிளிகள் தோளோடு (இந்தியன்)
7) தெரிந்த பாடல்தான். முதல் வரிகள் நினைவில் வர மறுக்கின்றன
9) பாடல் - பச்சைக்கிளிகள் தோளோடு...
படம் - இந்தியன்
10)பாடல் - தங்கத்தாமரை மலரே...
படம் - மின்சாரக்கனவு
9. pachchaikiLikaL thOLOdu
10.வை கரையில் வைகை கரையில் வந்தால் வருவேன்.......பயணங்கள் முடிவதில்லை
பழைய பாட்டு அப்படீன்னு நடுவாந்தரமானதா போட்டு விட்டீங்களே....:)))
மன்னிக்கவும்.....போன பாடலின் வரிசை எண் 12 தட்டச்சுவதில் தவறாகி விட்டது :))
3. ஏஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா...பயணங்கள் முடிவதில்லை
Latha, Chandravathanaa, chandra, Sankar,
kalanthu kONtamaikku nanRi.
Still to go !
Nos. 2, 4, 7, 8, 11
Clues:
2 - rajini movie
4 - vikaram movie
7 - Arjun movie
8 - rajini / kamal movie
11 - rajini movie
7.மலரே...மெளனமா..மெளனமே வேதமா...ஜெய் ஹிந்த்
க்ளூ குடுத்திட்டியே மக்கா...:)
8.நம்ம ஊரு சிங்காரி...சிங்கபூரு வந்தாளாம்...நினைத்தாலே இனிக்கும்
திரும்ப வர்ரேன்...இரு
****************
சங்கரா,
க்ளூ கொடுத்தவுடனே, "கலக்குறயே சந்துரு" :)
இன்னும் மூணு பாக்கி இருக்குப்பா !!!
என்றென்றும் அன்புடன்
பாலா
**********************
2) Chittukku chella chittukk oru siragu mulaiththathu -- Nallavanakku Nallavan
3)Namma ooru singari singaporu vandhaalam -- Ninaithalae inikkum
11. ராமனின் மோகனம்.. (நெற்றிக்கண்)
4. ஆசை ஆசை இப்பொழுது
பேராசை எப்பொழுது
aruppukottaiyan, Madhumitha, Anony, CT,
நன்றி !
Post a Comment